வெள்ளம் வந்தும் புத்தி வரலை... நிவாரணமாக வந்த பெட்ஷீட், வேட்டியையும் விற்றுக் குடிக்கும் கொடுமை!
சென்னை: வெள்ள நிவாரணமாக அரசு தந்த பொருட்களையும் விற்று, மது குடிக்கும் அளவிற்கு சிலர் மது அடிமையாக வாழ்ந்து வருகின்றனர் என்பதை டாஸ்மாக் கடைக்கு வெளியில் காணும் காட்சிகள் உறுதிபடுத்துகின்றன.
வெள்ளப் பாதிப்பிலிருந்து சென்னை மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனர். மழையால் பாதிக்கப்பட்ட பொருட்களைச் சுத்தம் செய்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், மழையோ, வெள்ளமோ எங்களை எதுவும் செய்து விட முடியாது என்பது போல் தங்கள் கடமையை செவ்வணே செய்து வருகின்றனர் ‘குடி'மகன்கள்.

அடை மழையிலும்...
ஆம், அடாது மழையிலும் விடாது குடித்து அவர்கள் சாதனை புரிந்தனர். அவர்களின் வசதிக்காகவே எவ்வித தங்கு தடையும் இன்றி சரக்குகள் கிடைக்க டாஸ்மாக்குகள் பெரும் துணை புரிந்தன.

அசராத டாஸ்மாக்...
எந்தப் பகுதியிலும் டாஸ்மாக்கிற்குள் தண்ணீர் புகுந்தது என்ற குற்றச்சாட்டே இல்லை. காரணம் அங்கு கடைகளில் இருந்த ‘தண்ணீர்' அனைத்தும் குடிமகன்களின் வயிற்றுக்குள் அல்லவா இருந்தது.

நிவாரணப் பொருட்கள்...
இந்நிலையில், வீடிழந்து உடமைகள் இழந்து வாடும் மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகித்தும் வருகின்றனர்.

வருமானமில்லை...
ஆனால், மழை, வெள்ளம் காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல், வருமானத்திற்கு வழியில்லாமல் தவித்த மது பிரியர்கள், மது அருந்த முடியாமல் பணமின்றி தவித்து வந்தனர். எனவே, இந்த நிவாரணப் பொருட்களை விற்று அவற்றில் கிடைக்கும் பணத்தில் அவர்கள் குடிக்கத் தொடங்கியுள்ளனர்.

மலிவு விலையில் விற்பனை...
பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளின் வாசலிலேயே நிவாரணப் பொருட்களின் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. நிவாரணத்திற்காக கொடுக்கப்பட்ட பெட்ஷீட், துண்டு, வேட்டி போன்றவற்றை மலிவு விலையில் அவர்கள் விற்பதைக் காண முடிகிறது.
-
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications