For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடிகை தன்ஷிகாவிடம் போதையில் ரகளை செய்த இளைஞர்கள் கைது!

By Shankar
Google Oneindia Tamil News

நடிகை தன்ஷிகாவிடம் போதையில் தகராறு செய்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

அரவான், பரதேசி போன்ற படங்களில் நடித்த தன்ஷிகா, இப்போது காத்தாடி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

காத்தாடி படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள வேகமன் பகுதியில் நடக்கிறது. பாடல் காட்சியொன்றை அங்கு படமாக்குகின்றனர். இதில் தன்ஷிகா கலந்து கொள்ளப் போயிருந்தார்.

Drunkard youngsters misbehaved with actress Dhanshika

படப்பிடிப்புக்கான ஆயத்த பணிகளை படக்குழுவினர் செய்தனர். லைட்கள் பொருத்தப்பட்டது. தன்ஷிகா கேரவனில் உட்கார்ந்து இருந்தார். அப்போது சில வாலிபர்கள் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு கும்பலாக வந்தனர். எல்லோரும் குடித்து இருந்தார்கள்.

கேரவனில் இருந்த தன்ஷிகாவைப் பார்க்க வேண்டும் என்றனர். அவரும் வெளியே வந்தார். உடனே தன்ஷிகாவுடன் சேர்ந்த நின்று போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்கள். மேனேஜர் அதற்கு சம்மதிக்கவில்லை.

இதனால் போதையில் இருந்தவர்கள் தகராறு செய்தனர். தன்ஷிகா கையை பிடித்து இழுக்க முயன்றார்கள். மேனேஜரையும் அடித்துள்ளனர். படப்பிடிப்பு குழுவினர் அங்கு ஓடோடி வந்தனர். போதையில் ரகளை செய்தவர்களை பிடித்து வைத்தனர்.

உடனே, போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்ததும் போதை ஆசாமிகளை அவர்களிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகு படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது.

English summary
Some drunkard youngsters entered at the sets of Kaathadi shooting and misbehaved with actress Dhanshika.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X