ஃபுல் போதையிலும் விவசாயிகளுக்காக போராடிய 'சின்சியர்' குடிமகன் - வீடியோ
ஈரோடு அந்தியூரில், விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதில் 'குடிமகன்' ஒருவர் சின்சியராக கலந்துகொண்டு டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினார்.
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் அந்தியூரில் போராட்டம் நடத்தினர். அப்போது ஒரு குடிமகன், ஃபுல் போதையிலும் விவசாயிகளுடன் சேர்ந்து கோஷம் எழுப்பினார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில், விவசாயிகள் இணைந்து போராட்டம் நடத்தினர். அவர்கள் டெல்லியில் 36 நாட்களாகப் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு ஃபுல் போதையில் வந்த குடிமகன் ஒருவர் தடுமாற்றத்துடன் விவசாயிகளுடன் நின்றார்.

பிறகு அவர்கள் கோஷம் எழுப்ப கூடவே சேர்ந்து தள்ளாடியபடியே கோஷம் போட்டார். குடிபோதையிலும் விவசாயிகளுக்காக போராடிய அவரின் சின்சியாரிட்டியை பாராட்டித்தான் ஆகவேண்டும்.












Click it and Unblock the Notifications