குற்றாலத்தில் கலகலத்த சாரல் திருவிழா... நீச்சலடித்து 3வது இடத்தை வென்ற ஏஎஸ்பி அரவிந்தன்

Subscribe to Oneindia Tamil

குற்றாலம்: குற்றாலத்தில் ஆண்டுத்தோறும் இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக சாரல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு சாரல் திருவிழா நேற்று தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று காலை சுற்றுலாப் பயணிகளுக்காக நீச்சல் போட்டி குற்றாலம் பேருராட்சி நீச்சல் குளத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 50க்கும் மேற்ப்பட்டோர் கலந்துக்கொண்டனர். 24 பேர் வெற்றி பெற்றனர்.

14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கவுசிக் முதலிடத்தையும், சுஜித் கிருஷ்ணா இரண்டாமிடத்தையும், ஆலண்ட் ராய் 3வது இடத்தையும் பெற்றனர்.

17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நிக்லேசே முதலிடத்தையும், ஹரி பிரசாத் 2 வது இடத்தையும், நிக்சன் 3வது இடத்தையும் பெற்றனர்.

DSP Aravindan wins in Courtallam Swimming contest

பொதுப் பிரிவில் சேது மாணிக்கவேல் முதல் இடத்தையும், எமில் 2வது இடத்தையும், தென்காசி காவல் துறை துணை கண்காணிப்பாளர் அரவிந்தன் 3வது இடத்தையும் பெற்றனர்.

தோட்டக்கலைதுறை கண்காட்சி:

தோட்டக்கலை துறை சார்பில் குற்றாலம் ஐந்தருவியில் அமைந்துள்ள தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான சுற்றுசூழல் பூங்காவில் தோட்டகலைத்துறை சார்பில் இன்று சாரல் திருவிழா 2வது நாளை முன்னிட்டு கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியினை தென்காசி மக்களவை உறுப்பினர் வசந்தி முருகேசன் மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தை வேலு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

DSP Aravindan wins in Courtallam Swimming contest

இந்த கண்காட்சி இன்றும், நாளையும் நடைபெறும். இந்த கண்காட்சியில் பல்வேறு பழங்களின் அணிவகுப்பு ஏராளமாக இடம்பெற்றுள்ளன. மேலும் அரியவகை மலர்களின் அணிவகுப்போடு கண்காட்சியும் இடம்பெற்றுள்ளன. குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தோடு இங்கு திரண்டுவந்து இயற்கையை ரசித்து சென்ற வண்ணம் உள்ளனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+