மகளுக்கு நீதி கிடைக்கும்வரை விடப்போவதில்லை: டிஎஸ்பி விஷ்ணுபிரியா தந்தை திட்டவட்டம்
விஷ்ணுபிரியா மரணம் தொடர்பான வழக்கில் அவரது தந்தை இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
Recommended Video

கோவை: திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை முடித்துக் கொள்வதாக சிபிஐ அறிவித்துள்ள நிலையில், தன் மகள் மரணத்தில் நீதி கிடைக்கும் வரை விடப்போவதில்லை என அவரது தந்தை ரவி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கோகுல்ராஜ் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா கடந்த 2015 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாமக்கல்லில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை வழக்கை சி பி சி ஐ டி விசாரித்து வந்த நிலையில் அதனை சிபிஐ க்கு மாற்றம் செய்ய கோரி விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததன் அடிப்படையில் வழக்கானது சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்த சூழலில் கடந்த டிசம்பர் மாதம் விசாரணையை முடித்து கொண்ட சிபிஐ கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. அதில் விஷ்ணுபிரியா மரணம் தற்கொலையே என்றும் கொலைக்கான முகாந்திரம் இல்லாததால் விசாரணையை முடித்து கொள்வதாகவும் கூறியிருந்தது.
இதையடுத்து கோவை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் சிபிஐ அறிக்கையின் முகாந்திரத்தை சுட்டிக்காட்டி விஷ்ணு பிரியாவின் தந்தை ரவிக்கு சம்மன் அனுப்பி இருந்தது. அதில் சிபிஐ அறிக்கையில் ஏதேனும் கருத்துக்கள் கூற விரும்பினால் 9 ம் தேதி கோவை நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி விஷ்ணு பிரியாவின் தந்தை இன்று கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் வந்தார். சம்மன் அனுப்பியதால் இன்று தான் ஆஜராக வந்ததாகவும், வழக்கை முடித்துக் கொள்ள எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினார். பின்னர் நீதிபதி மலர்கண்ணன் வரும் 24 தேதிக்கு இவ்வழக்கை ஒத்தி வைத்தார. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஷ்ணுபிரியா தந்தை ரவி, தன் மகள் மரணத்தில் நீதி கிடைக்கும் வரை விடப்போவதில்லை என்றார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications