விஷ்ணுபிரியா எழுதிய தற்கொலை கடிதத்தில் மறைக்கப்பட்ட 2 பக்கங்களை அம்பலப்படுத்திய சிபிசிஐடி
நாமக்கல்: திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக இருந்த விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஷ்ணுப்பிரியா எழுதியதாக 9 பக்கங்கள் கொண்டாதக வெளியாகியிருந்தது ஒரு தற்கொலை கடிதம்.
அந்த கடிதத்தில், இரு பக்கங்கள் வெளியாகவில்லை என்றும், அதை காவல்துறை மறைத்து வைத்துள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், காவல்துறையால் மறைக்கப்பட்டதாக கூறப்பட்ட கடிதத்தின் மேலும் இரண்டு பக்கங்கள் வெளியாகி உள்ளன. அவரது தற்கொலை தொடர்பான முக்கிய வீடியோ ஆதாரம் இருப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தான் தற்கொலை செய்யும் வீடியோ தன் மடிக்கனிணியில் இருக்கும் என்றும், அதனை எடுத்து பார்த்துக்கொள்ளலாம் என்று அதில் விஷ்ணுப்பிரியா எழுதியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்தால் தற்கொலைக்கான காரணம் தெரிய வரும் என்பதால் தன்னுடைய உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என்றும் அதில், கூறப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் மறைக்கப்பட்டிருந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் அதை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications