தீவிரமடையும் கதிராமங்கலம் போராட்டம்... முதல்வர் வீட்டு முன்பு போலீஸ் குவிப்பு
முதல்வர் பழனிச்சாமி வீட்டை கதிராமங்கலம் மக்கள் முற்றுகையிட்டு போராட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் வீட்டு முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தஞ்சை கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி குழாயில் ஏற்பட்ட கசிவை அடுத்து கொந்தளித்த மக்கள், போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் உள்ள முதல்வர் பழனிச்சாமி வீட்டின் முன்பு கதிராமங்கலம் மக்கள் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து முதல்வர் வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலத்தில் 7 இடங்களில் எண்ணெய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த 30ம் தேதி எண்ணெய் கிணறு அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது.
அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்த கிராமத்தினர் சம்பவ இடத்தில் குவிந்து போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும், 9 பேரை கைது செய்தனர். இதையடுத்து, கைது செய்தவர்களை விடுவிக்க கோரி கதிராமங்கலத்தில் வணிகர்கள் சனிக்கிழமையன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3வது நாளாக போராட்டம்
மேலும் உடைப்பு ஏற்பட்ட ஆழ்துளை கிணற்றை முற்றுகையிட வந்த 75 பேரை போலீசார் கைது செய்தனர். 3வது நாளாக இன்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பதற்றம் நிலவி வருகிறது.

போராட்டக்காரர்கள் மனு
இந்த நிலையில், கதிராமங்கலத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் 3 குழுவாகப் பிரிந்து ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம், முதல்வர் வீட்டிற்குச் சென்று மனு அளிக்க உள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதனால் சென்னையில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

போலீசார் குவிப்பு
இதைத் தொடந்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீடு, தலைமைச் செயலகம், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பாக போலீஸார் குவிக்கப்பட்டனர். இதேபோல், தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மெரினாவில் கண்காணிப்பு
இதனிடையே, மீண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு நடந்த போராட்டம் போல், போராட்டக்காரர்கள் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் கூடி விடாதபடி போலீசார் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications