குமரியில் மரங்களை வேரோடு பிடுங்கிப் போடும் சூறைக்காற்று... மரம் விழுந்ததில் 4 பேர் பலி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் மரம் சாய்ந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஓகி புயல் மிரட்டல்- 12 மணிநேரத்தில் வருகிறது- வானிலை மையம் எச்சரிக்கை- வீடியோ

    கன்னியாகுமரி: ஓகி புயல் காரணமாக வீசும் பலத்த காற்றால் குமரி மாவட்டத்தில் மரங்கள் வேறோடு சாய்ந்து வருகின்றன. மரம் சாய்ந்து விழுந்ததில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கன்னியாகுமரிக்கு அருகே உருவாகியுள்ள ஓகி புயல் காரணமாக நேற்று இரவு முதல் அங்கு கனமழையுடன், சூறைக்காற்றும் வீசி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கும் இதே நிலை தான் நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    Due to trees fall for Cyclone Ockhi 4 died as now in Kanyakumari district

    மணிக்கு 85 கிலோ மீட்டரில் வீசத் தொடங்கிய புயல் காற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் சாலையோரங்களில் இருந்த பெரிய பெரிய மரங்கள் வேறோடு சாய்ந்து வருகின்றன. மரங்கள் சாய்வதால் அவற்றோடு மின்கம்பங்களும் சாய்ந்து விழுவதால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடை பட்டுள்ளது.

    நாகர்கோவிலில் மரம் சாய்ந்ததில் மரத்தடியில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதே போன்று குழித்துறை அருகே மலையடி பகுதியில் ஒருவரும் உயிரிழந்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஓகி புயலுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+