For Daily Alerts
Just In
சட்டசபையிலிருந்து 5 நாட்களுக்கு துரைமுருகன் சஸ்பெண்ட்- ஸ்டாலினுக்கு சபாநாயகர் கண்டனம்
இன்று முதல் 5 நாட்களுக்கு சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள துரைமுருகனுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் மீதான விவாதம் இன்று சட்டசபையில் நடந்தது. அதற்கு முன்னதாக அவை கூடியதும், நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் மீது உரிமை மீ்றல் பிரச்சினை கொண்டு வந்தார். இந்த பிரச்சினையை எழுப்பியது, அவையின் உரிமைகளை மீறும் வகையில் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக சபாநாயகர் தனபால் கண்டனம் தெரிவித்தார்.
பின்னர் துரைமுருகன் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும், இன்று முதல் 5 நாட்களுக்கு துரைமுருகன் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் சபாநாயகர் அறிவித்தார்.
Comments
English summary
TN assembly speaker Dhanapal has suspended DMK leader Duraimurugan for 5 days from the budget session.
Story first published: Monday, February 17, 2014, 12:51 [IST]