சொத்துக்குவிப்பு வழக்கு... வேலூர் கோர்ட்டில் மனைவியுடன் துரைமுருகன் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
வேலூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் தனது மனைவி சாந்தகுமாரியுடன் இன்று நேரில் ஆஜரானார்.
வருமானத்திற்கு மீறிய வகையில் ரூ. 1.40 கோடி மதிப்புக்கு சொத்துக்களைக் குவித்ததாக துரைமுருகன், சாந்தகுமாரி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வேலூர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2011ம் ஆண்டு இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அன்று முதல் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று துரைமுருகனும், அவரது மனைவியும் நேரில் ஆஜராக நீதிபதி சிவகடாட்சம் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று இருவரும் நேரில் ஆஜரானார்கள். இதைத் தொடர்ந்து விசாரணை அக்டோபர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications