எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க அழைத்தார் ஆளுநர்

எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதால் இன்று மாலை 4 மணிக்கு முதல்வராக பதவியேற்பார் என்று அவரது ஆதரவு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்களினால் சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதால் அவர் இன்று மாலை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுகவில் நடைபெற்று வரும் குழப்பங்கள்,சசிகலா சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டதிலிருந்து விறுவிறுப்படைந்துள்ளது.

E.Palanaisamy may be sworn in as CM today-12-16

ஆட்சி அமைக்க போவது யார் என்பதில் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் எனப்படும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனால் இருதரப்பும் பல்வேறு முறை ஆளுநரை சந்தித்து,ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளனர்.

கூவத்தூரில் 9 நாட்களாக அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தங்களை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார் என்று எல்எல்ஏக்கள் எதிர்ப்பார்த்து அவர்கள் காத்திருந்த நிலையில், சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி மூன்றாவது முறையாக இன்றும் காலை ஆளுநரை சந்திக்க சென்றார்

இன்று ஆளுநர் ஆட்சி அமைக்க கூறிவிட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எம்எல்ஏக்கள் ஆலோசனை கூவத்தூரில் நடைபெற்றது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அவர் இன்று மாலை 4 மணிக்கு முதல்வராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்பார் என்று ஆளுநர் மாளிகை வட்டாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+