கருணாநிதியின் மறைவு தமிழர்களுக்கு பேரிழப்பு.. கொங்கு ஈஸ்வரன் இரங்கல்
சென்னை: முத்தமிழ் அறிஞர் கருணாநிதி இந்த மண்ணைவிட்டு மறைந்தது உலகத் தமிழர்களுக்கும் தமிழுக்கும் பேரிழப்பு என்றும் அவருடைய மறைவை தாங்கக் கூடிய மன வலிமையை அவர் குடும்பத்தாருக்கும், உலக தமிழர்கள் அனைவருக்கும் இறைவன் தர வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.அர்.ஈஸ்வரன் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் இந்த மண்ணைவிட்டு மறைந்தது உலக தமிழர்களுக்கு பேரிழப்பு. தமிழுக்கும் இழப்புதான். எதையும் தாங்கும் வலிமை கொண்டவர் தலைவர் கலைஞர்.

அவர் பள்ளியில் படித்த அனைவருக்கும் வலி தாங்கக் கூடிய பயிற்சியை அவர் கொடுத்திருந்தாலும் அவரையே இழக்கின்ற இந்த வலியை தாங்கக் கூடிய சக்தி யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் இயற்கையின் இந்த சதியை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
அவருடைய வாழ்க்கை பாதை, அரசியல் பாதை பயணிக்கின்ற அனைவருக்கும் மிகப்பெரிய பாடமாக அமையும். தலைவர் கலைஞர் அவர்களுடைய மறைவை தாங்கக் கூடிய அந்த மன வலிமையை அவர் குடும்பத்தாருக்கும், உலக தமிழர்கள் அனைவருக்கும் இறைவன் தர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications