மதுரையில் நிறுத்தப்பட்டிருந்த 2 அரசு பஸ்களில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது
மதுரை: மதுரையில் நிறுத்தப்பட்டிருந்த 2 அரசுப் பேருந்துகளில் வெடிச் சம்பவம் நடந்துள்ளது. வெடித்தது டைமர் பொருத்தப்பட்ட வெடிகுண்டு என்று தெரிய வந்துள்ளது.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒரு பஸ் சேலத்திற்கும், இன்னொரு பஸ் ஓசூருக்கும் செல்லக் காத்திருந்தது.

பஸ்ஸில் அப்போது பயணிகள் யாரும் இல்லை. காலியாக இருந்தன இரு பஸ்களும். இந்த சமயத்தில் நேற்று இரவு இரு பஸ்களிலும் அடுத்தடுத்து வெடிச் சத்தம் கேட்டது. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர். பஸ்களில் ஆட்கள் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பஸ்களிலும் லேசான சேதமே ஏற்பட்டிருந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறிய போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவ், வெடித்தது மிகவும் குறைந்த சக்தி கொண்ட நாட்டு வெடிகுண்டு வகையாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கூறினார். இருப்பினும் விசாரணை முடிவில்தான் இதுகுறித்துத் தெரிய வரும் என்றார் அவர்.
மர்ம நபர்கள் வீசியதாக தகவல்
இதற்கிடையே சம்பவ இடத்தில் இருந்த சிலர் கூறுகையில், சில மர்ம நபர்கள் வந்து பஸ்களில் நாட்டு வெடிகுண்டுகளை வீசிச் சென்றதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரவுடிகள் செயலா?
மதுரையில் சமீப காலங்களில் ரவுடிக் கும்பல்களுக்கிடையே கடும் மோதல்கள் நடைபெறுவது வழக்கமாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட வரிச்சியூர் செல்வம் கும்பல் இன்னொரு பிரபல ரவுடியைப் போட்டுத் தள்ள நாட்டு வெடிகுண்டுகளை டிபன் பாக்ஸில் போட்டு பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களில் வெடிச்சத்தம் கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications