ஆலந்தூர் சட்டசபைக்கும் 24-ந் தேதி இடைத்தேர்தல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 24-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 9 கட்டங்களாக ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 12-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ந் தேதியன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
அத்துடன் தமிழகத்தில் காலியாக உள்ள ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 24-ந் தேதியன்றே நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தொகுதியில் தேமுதிக எம்.எல்.ஏ.வாக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து ஆலந்தூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. இடம் காலியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications