கட்சி பேரில் இருப்பதால் கலாம் படங்களை மறைக்கலாமா தேர்தல் ஆணையம்?- குமுறும் பொன்ராஜ்
சென்னை: தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்காக நடைமுறைக்கு வந்துள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் அவர்களின் படங்களும் மறைக்கப்பட்டு வருவதற்கு கலாம் பெயரில் கட்சி தொடங்கியவரும், அவரது உதவியாளருமான பொன்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் அப்துல் கலாம் மீதுள்ள மரியாதையால் கலாம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் என்ற பெயரில் போர்டு ஒன்றை வைத்திருந்தனர்.
இந்தப் பலகை தேர்தல் ஆணைய விதிகளுக்கு முரணானது என்று சொல்லி, தேர்தல் ஆணைய பணியாளர்கள் சிலர் பிளாஸ்டிக் பையால் கலாம் முகத்தை மூடினர்.

சண்டை போட்ட டிரைவர்கள்:
இதனால் அதிருப்தியான ஆட்டோ டிரைவர்கள் நாடே கொண்டாடும் உன்னத மனிதர் கலாம். அவர் முகத்தை எப்படி மறைக்கலாம் என சண்டைபோட்டுள்ளனர்.

கட்சி இருக்கே கலாம் பெயரில்:
ஆனால், ஆணையத்தின் ஊழியர்களோ கலாம் பெயரில் அவரது உதவியாளர் பொன்ராஜ் அப்துல் கலாம் இலட்சிய இந்திய கட்சி நடத்தி வருகிறார். ஆணையத்தின் விதிப்படிதான் கலாம் முகத்தை மறைக்கிறோம் என பதில் கூறியுள்ளனர். இதைப் போலவே, மாநிலம் முழுவதும் உள்ள கலாமின் படத்தை மறைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையத்துக்கு தேவையில்லை:
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பொன்ராஜ், " இப்படியொரு சம்பவத்தைக் கேட்கவே வருத்தமாக இருக்கிறது. தேர்தல் ஆணையத்திற்கு இது தேவையில்லாத வேலை. நோட்டீஸ் ஒட்டக் கூடாது. சுவர் விளம்பரம் எழுதக் கூடாது என்று சொன்னால் சரி. அதைவிட்டுவிட்டு உலகமே மதிக்கும் தலைவரை இப்படி பிளாஸ்டிக் பை போட்டு மறைப்பது அவசியமற்றது.

தலைவர்களை அகற்ற முடியாது:
காந்தி, காமராஜர், அண்ணாதுரை ஆகியோரது படங்களை மறைத்தாலும், மக்கள் மனதில் இருந்து இந்தத் தலைவர்களை அகற்ற முடியாது. அதைப்போலத்தான் அப்துல் கலாம் அவர்களும். மறைப்பதால் அது என்ன என்ற கேள்விதான் மக்கள் மனதில் வரும்.

கின்னஸ் சாதனை படைத்தவர்:
உலகிலேயே அதிகப்படியான போட்டோக்கள் எடுக்கப்பட்டது கலாம் கூடத்தான். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுமளவுக்கு கோடிக்கணக்கான மக்கள் அவரோடு படம் எடுத்திருக்கிறார்கள். அதனால் அந்தப் படங்களை மறைத்துவிட முடியுமா என்ன..தேர்தல் ஆணையம் தேவையற்ற வேலைகளில் ஈடுபடுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications