கணக்கு காட்டாத 5 தமிழக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு!
சென்னை: கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு, பிரசாரம் தொடர்பான தேர்தல் செலவு கணக்கைக் காட்டாத ஐந்து தமிழக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளதாவது :-
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தேர்தல் செலவு கணக்கை குறிப்பிட்ட நாளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஆனால் தமிழகத்தில் இருந்து போட்டியிட்ட சில வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை.

அதன்படி, சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மேகராஜ் மல்லர், சரவணன், மதுரையில் போட்டியிட்ட சந்திரபோஸ், தூத்துக்குடியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சாந்தாதேவி, வின்ஸ்டன் ஆண்டோ அவர்களின் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை.
எனவே அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிடப்படுகிறது. அவர்கள் மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டிருந்தால் அந்தப் பதவியில் இருந்தும், தேர்வு செய்யப்படுவதில் இருந்தும் 3 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
சிபிஐ தொடங்கி ED வரை.. எல்லாருக்கும் பறந்த லெட்டர்.. தமிழக தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி -
அடேங்கப்பா.. தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.42.65 கோடி பறிமுதல்! கறார் அதிகாரிகள்.. கண்காணிப்பு தீவிரம்! -
இவ்வளவு ஸ்ட்ரிக்டா? 2 நாளில் 23 கோடி சிக்கியது! பணம், பொருளாக அள்ளிய தேர்தல் அதிகாரிகள்! முழு விவரம் -
"327 பார்வையாளர்கள் நியமனம்".. தமிழகத்தை கண்ட்ரோலில் எடுத்த தேர்தல் ஆணையம்.. அதிரடி அறிவிப்பு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications