தேர்தல் விதிமுறை மீறல்: நெல்லையில் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையில் தேர்தல் விதிமுறைகளை மீறிய அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி லோக்சபா தொகுதியின் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அங்குள்ள ஒரு திருமண்டபத்தில் நடைபெற்றது. மண்டபத்திற்கு வெளியே அதிமுக கட்சிக் கொடிகள் கட்டப்பட்டிருந்தது. அப்போது , அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட தேர்தல் கண்காணிப்பு பறக்கும்படை அலுவலர் பிரேமா, அங்கிருந்த கட்சி கொடிகளை உடனே அகற்றுமாறு அதிமுகவினரிடம் கூறினார்.
இதனை சற்றும் எதிர்பாராத அதிமுக நிர்வாகிகள் , பறக்கும்படை அலுவலர் பிரேமாவிடம் வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து, இதுகுறித்து பறக்கும்படை அலுவலர் பிரேமா கொடுத்த புகாரின் பேரில் நெல்லை ஜங்ஷன் போலீசார், அதிமுகவினர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications