For Daily Alerts
Just In
தேர்தல் விதிமுறை மீறல்: நெல்லையில் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு
நெல்லை: நெல்லையில் தேர்தல் விதிமுறைகளை மீறிய அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி லோக்சபா தொகுதியின் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அங்குள்ள ஒரு திருமண்டபத்தில் நடைபெற்றது. மண்டபத்திற்கு வெளியே அதிமுக கட்சிக் கொடிகள் கட்டப்பட்டிருந்தது. அப்போது , அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட தேர்தல் கண்காணிப்பு பறக்கும்படை அலுவலர் பிரேமா, அங்கிருந்த கட்சி கொடிகளை உடனே அகற்றுமாறு அதிமுகவினரிடம் கூறினார்.
இதனை சற்றும் எதிர்பாராத அதிமுக நிர்வாகிகள் , பறக்கும்படை அலுவலர் பிரேமாவிடம் வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து, இதுகுறித்து பறக்கும்படை அலுவலர் பிரேமா கொடுத்த புகாரின் பேரில் நெல்லை ஜங்ஷன் போலீசார், அதிமுகவினர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்தனர்.
Comments
lok sabha election 2014 tirunelveli admk code of conduct லோக்சபா தேர்தல் 2014 திருநெல்வேலி நெல்லை தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறை மீறல் அதிமுக வழக்குப்பதிவு
English summary
In Tirunelveli. the election commission has filed a case against ADMK party men for violating code of conduct.
Story first published: Monday, March 10, 2014, 13:22 [IST]