அதிமுக பெயர், கொடி, இரட்டை இலை சின்னம் முடக்கம்... தேர்தல் ஆணைய உத்தரவு சொல்வது இதுதான்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவின் இரட்டை இலையை மட்டுமின்றி அக்கட்சியின் பெயர் கொடியையும் முடக்கி தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது இடைக்கால உத்தரவு எனவும் தேர்தல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் புதன்கிழமை நள்ளிரவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதன் சாரம்சம்:
- ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக பெயரையோ, சின்னத்தையோ, கொடியையோ சசிகலா, ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்த கூடாது.
- அதிமுகவின் அதிகாரப்பூர்வமான இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருப்பது இடைக்கால உத்தரவு.
Leaf Symbol freezed #ADMK pic.twitter.com/JhGPIMhT18
— Stephen (@SteveNews1) March 22, 2017
- ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் இருதரப்பும் வியாழக்கிழமையன்று காலை 10 மணிக்குள் புதிய கட்சி பெயர், சின்னத்தை தேர்வு செய்ய அணுகலாம்.
- தேர்தல் ஆணையம் அளிக்கும் சின்னங்களில் ஒன்றை தேர்வு செய்யலாம்.
- இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆவணங்கள், பிரமாண பத்திரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஏப்ரல் 17-ந் தேதிக்குள் தாக்கல் செய்யலாம்.
- அதிமுக என்ற பெயரை புதிய கட்சியின் பெயருக்கு முன்னரோ பின்னரோ பயன்படுத்திக் கொள்ளலாம்.
- 20,000 பக்க ஆவணங்களை குறைவான தருணத்தில் படித்து பார்த்து உடனே முடிவெடுக்க முடியாததால் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பிக்கிறது.












Click it and Unblock the Notifications