வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய 22 லட்சம் பேர் விண்ணப்பம்: பிரவீன்குமார்

வாக்காளர் தகுதி பெறும் நாளாக 1.1.2014 அன்றைய தேதியை அடிப்படையாக வைத்து தமிழக சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2014 திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி, 1.10.13 அன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் உத்தரவிட்டார். அன்றிலிருந்து இருந்து 31.10.13 வரை (நேற்று) அந்த பட்டியலில் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், பெயர் திருத்தம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என்றும் அறிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்வது குறித்து, சம்பந்தப்பட்ட அலுவலகங்கள், வாக்குச்சாவடிகளில் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. மூன்று நாட்கள் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதுமட்டுமல்லாமல் ஆன்-லைன் மூலமாகவும் விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வழிவகை செய்யப்பட்டது. இதற்காக சில கம்ப்யூட்டர் மையங்களுடன் தேர்தல் கமிஷன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது. விண்ணப்பங்களை பெறும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது.
இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியலில் பெயர்களை திருத்தம் செய்ய 31-ந் தேதி மாலை 5 மணியோடு விண்ணப்பம் வாங்கும் பணி நிறைவடைந்தது. இரவு 12 மணியுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறும் பணியும் முடிவடைந்துவிட்டது. இதுவரை சுமார் 22 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இவற்றில் ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யப்பட்ட சுமார் 1.50 லட்சம் விண்ணப்பங்களும் அடங்கும்.
இனிமேல் இந்த விண்ணப்பங்கள் தொடர்பாக வீடு, வீடாக அலுவலர்கள் வந்து விவரங்களை சரிபார்ப்பார்கள். அதன் பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அடுத்த ஆண்டு ( ஜனவரி) 6-ந் தேதி வெளியிடப்படும். விண்ணப்பங்களைப் பெறும் தேதி (அக்டோபர் 31) முடிந்துவிட்டாலும் கூட, வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்வதற்கான விண்ணப்பங்களை கொடுக்கலாம்.
ஆனால் தாலுகா அலுவலகங்களில் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அக்டோபர் 31-ந் தேதிக்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் ஜனவரி 6-ந் தேதிக்கு மேல்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
கடந்த ஆண்டு 23 லட்சம் விண்ணப்பங்கள் வந்திருந்தன. கடந்த ஆண்டில் ஆன்-லைன் மூலம் 19 ஆயிரம் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலின்போது 6 ஆயிரம் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இதில் 300 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
மதுக்கடைகளுக்கு தேர்தல் ஆணையம் போடும் கடிவாளம்.. ஓவர் டைம் என புலம்பும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா?












Click it and Unblock the Notifications