வீணாகிப் போன 'வாங்கமாட்டோம் நோட்டு' பிரசாரம்.. படுவிரக்தியில் தேர்தல் ஆணையம்
ஆர்கே நகரில் ஓட்டுக்கு பணத்தை விற்கமாட்டோம் என்கிற பிரசாரம் கேவலமான தோல்வியை சந்தித்தில் தேர்தல் ஆணையம் விரக்தியில் இருக்கிறதாம்.
சென்னை: ஆர்.கே.நகரில் தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்க மாட்டோம் என்பதற்காக செய்த பிரசாரம் முழுவதும் வீணாகிப் போனதே தேர்தல் ஆணைய அதிகாரிகள் நொந்து போயுள்ளனராம்.
ஆர்.கே.நகர். தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே தொகுதி மக்களிடையே வாக்கு ஜனநாயகத்தை பரவலாக கொண்டு செல்லும் வகையில் விழிப்புணர்வு விசயத்தில் கவனம் செலுத்தியது தேர்தல் ஆணையம். மதுரை திருமங்கலத்தில் தொடங்கிய ஃபார்முலாவை ஆர்கேநகரில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென தேர்தல் அதிகாரிகள் நினைத்தனர்.

இதன்படி களமிறங்கிய தேர்தல் ஆணையம், 'போடுவோம் ஓட்டு; வாங்கமாட்டோம் நோட்டு' என்கிற முழக்கத்துடன் விளம்பர நோட்டீஸ்களை அச்சடித்து தொகுதி முழுவதும் விநியோகித்தது. மேலும், 'என் வாக்கு விற்பனைக்கு அல்ல. ஜனநாயக ஆயுதத்தை முறையாக பயன்படுத்துவேன்' என தெருமுனைப் பிரச்சாரங்களையும் செய்தது தேர்தல் ஆணையம்.
ஆனால் எந்த பிரசாரமுமே எடுபடவில்லை. இதனால் விழிப்புணர்வு பிரச்சாரத்துக்காக செலவிடும் பணத்தை வேறுவகையில் பயன்படுத்தினால் பிரயோஜனமாவது இருக்கும் என ஆதங்கத்துடன் விவாதித்திருக்கிறார்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியாத போக்கினைப் பற்றி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு விரிவாகவே கடிதம் எழுதியுள்ளார் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஸ் லக்கானி.
தமிழக நிலவரம் குறித்து விவாதிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளோ, வெளி மாநிலங்களில் சீனியர் அமைச்சராக இருக்கும் ஒருவரிடம் என்ன பணம் குவிக்கப்பட்டிருக்குமோ அது இங்கே வார்டு கவுன்சிலரிடமே இருக்கிறதே.. இப்படியெல்லாமா தமிழகத்தில் கொள்ளையடித்திருக்கிறார்கள் என நொந்து போகின்றனராம்.. உடனிருக்கும் தமிழக அதிகாரிகள் தலைகுனியத்தான் வேண்டியிருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications