ஸ்ரீரங்கம் தொகுதி சிறப்பு பார்வையாளராக கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்
திருச்சி: கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அனில் குமார் ஜா ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்காக சிறப்பு பார்வையாளராக இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இத் தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலையொட்டி நடத்தப்பட்ட சோதனையில் ரூ.49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் திருச்சியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா ஆலோசனை நடத்தினார். திருச்சி ஆட்சியர் பழனிசாமி, தேர்தல் நடத்தும் அதிகாரி மனோகரன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். முன்னதாக ஸ்ரீரங்கத்தில் தேர்தல் பணிகளை சந்தீப் சக்சேனா ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
ஸ்ரீரங்கம் தொகுதியில் பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
சிறப்பு பார்வையாளர்
ஏற்கெனவே பொது, காவல், செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சிறப்புப் பார்வையாளராக கர்நாடகம் மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி அனில்குமார் ஜாவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. விரைவில் அவர் திருச்சி வந்து தேர்தல் பணிகளை கண்காணிப்பார்.
கண்காணிப்பு
தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் கண்காணித்து வரும் நிலையில், பண விநியோகம், பரிசு வழங்குதல், மதுபாட்டில்கள் வழங்குதல் போன்ற தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுபவர்களை வீடியோ, புகைப்படமாக எடுத்து அனுப்பும் வகையில் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. கூகுள் பிளே அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து, தேர்தல் ஆணைய இணைய முகவரிக்குச் சென்று புகாரை எந்த இடத்தில் வேண்டுமானாலும் அளிக்கலாம்.
பறக்கும்படை
ஏற்கெனவே 24 பறக்கும்படை குழுக்கள் உள்ள நிலையில், மேலும் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும்படையினர் எடுத்த நடவடிக்கையினால் இதுவரை 49 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பறக்கும் படையினர் இனி 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு பறக்கும் படையிலும் 5 பேர் உள்ளனர். இவர்கள் 3 ‘ஷிப்டு' ஆக பணியாற்றி வருகிறார்கள்.
போலி வாக்காளர்கள்
நீதிமன்ற உத்தரவின்படி வாக்காளர் பட்டியலில் இரட்டைப்பதிவு குறித்த விவரங்களை வீடுதோறும் சென்று ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விடுபட்டவர்கள், வீடு மாறிச் சென்றவர்கள், இறந்தவர்கள் விவரங்கள் சேகரிப்புப் பணியை மேற்கொள்ளவோம்.
வெளி மாவட்ட ஆட்கள்
இதுவரை ஸ்ரீரங்கம் தொகுதியில் 13,000 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டிருக்கின்றன. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். பிப்ரவரி 11ம் தேதி மாலை 5 மணிக்கு மேல் தொகுதி வாக்காளர்களைத் தவிர இதர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இருக்க அனுமதியில்லை. அதைத் தொடர்ந்து விடுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும்.
விதிமீறல்
பள்ளி கல்வி துறை அமைச்சர் தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி மாணவர்களை பயன்படுத்தியதாக புகார் வந்து உள்ளது. இதுபற்றி மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி வருகிறது என்று குறிப்பிட்டார்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications