Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரும் பரபரப்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு... சட்டசபை கதவுகளை மூடி விட்டனர்!

சட்டசபையில் இன்று நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்து பேசினார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிஇன்று நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையில்தாக்கல் செய்து பேசினார். சட்டசபை கதவுகள் தற்போது மூடப்பட்டு விட்டது.

அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி புதிய முதல்வராக பதவி ஏற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். எடப்பாடி பழனிச்சாமி தனக்கு 124 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்ற கடிதத்தை ஆளுநரிடம் காட்டியதன் பேரிலேயே அவரது தலைமையில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

Edapaddi Palanisami to seek trust vote today

பதவியேற்ற நாளில் இருந்து 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று சட்டசபையில் பெரும் பான்மை பலத்தை நிரூபிப்பதாக அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்காக இன்று காலை 11 மணிக்கு சிறப்பு சட்டசபை கூட்டம் கூடியது.

இன்று சட்டசபை கூடியதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அரசின் மீதான நம்பிக்கையை கோரி தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது பேசினார். இதையடுத்து சட்டசபை கதவுகள் மூடப்பட்டு விட்டன. உள்ளே கடும் அமளி நிலவும் நிலையில் கதவுகளை மூடியிருப்பது பரபரப்பைக் கூட்டியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+