எடப்பாடி பழனிச்சாமியே முதல்வராக தொடர வேண்டும்.. அவருக்கே என் ஆதரவு- எம்எல்ஏ ஜக்கையன்
எடப்பாடி பழனிச்சாமியே முதல்வராக தொடரவேண்டும் என்று நினைத்து அவருக்கு ஆதரவு அளிப்பதாக கம்பம் சட்டசபை தொகுதி எம்எல்ஏ ஜக்கையன் கூறியுள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏவாக இருந்த கம்பம் ஜக்கையன் இன்று எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு மாறியுள்ளார். முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியே தொடர வேண்டும் என்று விரும்புவதாக கூறியுள்ளார்.
ஆளுநரிடம் கடிதம் கொடுத்த 19 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனிடையே இன்று எம்எல்ஏ எஸ்டிகே ஜக்கையன், இன்று சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்தார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிப்பதாக செய்தியாளர்களிடம் கூறினார். இது உட்கட்சி பிரச்சினை என்பது அனைவருக்குமே தெரியும்.
12 நாட்களாக நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்கும் போது இந்த சண்டையை திமுக பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது.
இதற்கு இடம் தர கூடாது. அதிமுக ஆட்சிக்கு ஏதாவது பங்கம் வந்து விடுமோ என்று அஞ்சியே அணி மாறியுள்ளேன்
கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் ஆட்சிக்கு எந்த பங்கமும் வந்து விடக்கூடாது. எடப்பாடி பழனிச்சாமியே தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்
டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டதால் ஆளுநரிடம் மனு அளித்தேன். டிடிவி தினகரனிடம் இது பற்றி பேசியுள்ளேன்
பிரச்சினை வரும் போது எல்லோரும் ஒன்றாக இணைவோம். இன்றும் சில நண்பர்கள் வர வாய்ப்பு உள்ளது.
முதல்வர் எடப்பாடிக்கு பெரும்பான்மை இருப்பதால் ஆட்சி தொடர ஆதரவு அளிப்பதாகவும் ஜக்கையன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications