Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வராக பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிச்சாமி.. ஜெ. அறையில் அமர்ந்தார்

முதல்வராக முறைப்படி எடப்பாடி பழனிச்சாமி இன்று பொறுப்பேற்றார். அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி வென்ற பின்னர் முறைப்படி தலைமைச் செயலகம் சென்று இன்று பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிச்சாமி.

இன்று முதல்முறையாக தலைமைச் செயலகம் வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் சென்னை காவல் துறை ஆணையர் ஜார்ஜ் மற்றும் அமைச்சர்கள் வரவேற்பளித்தனர்.

Edapadi Palanisamy sits on J's Chair

பின்னர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஜெயலலிதா அமர்ந்த அறைக்குச் சென்ற எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா அமர்ந்த நாற்காலியில் அமர்ந்து 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இதனைத் தொடர்ந்து அதிமுகவின் நிர்வாகிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் முதல்வருக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஓபிஎஸ் முதல்வராக இருந்த போது ஜெயலலிதா அறைக்கு செல்லவில்லை. அவர் அமர்ந்த நாற்காலியில் இறுதிவரை அமராமல் உறுதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+