எங்களால் எடப்பாடி அரசு கவிழாது... சொல்கிறார் ஓபிஎஸ்!
எங்களால் எடப்பாடி அரசு கவிழாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: எங்களால் எடப்பாடி அரசு கவிழாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக அணி மூன்றாக சிதறியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு கூறியுள்ளார்.
அதிமுக தற்போது 3 அணிகளாக சிதறியுள்ளது. டிடிவி தினகரன் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி தரப்பு அறிவித்துள்ள நிலையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இதனால் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது எடப்பாடி ஆட்சி கவிழுமா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் தங்களால் ஆட்சி கவிழாது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications