கிருஷ்ணசாமியின் மனைவி பாரதி மகாதேவியிடம் போனில் ஆறுதல் தெரிவித்த முதல்வர்
கிருஷ்ணசாமியின் மனைவி பாரதி மகாதேவியிடம் போனில் தொடர்பு கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: எர்ணாகுளத்தில் மரணமடைந்த கிருஷ்ணசாமியின் மனைவி பாரதி மகாதேவியிடம் போனில் தொடர்பு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் தெரிவித்தார்.
எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுத திருத்துறைப்பூண்டியை சேர்ந்த மாணவர் கஸ்தூரி மகாலிங்கம், தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் சென்றிருந்தார். நேற்று இருவரும் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தனர்.

இன்று காலை மகனை அழைத்து கொண்டு எர்ணாகுளத்தில் சம்மணம் என்ற இடத்தில் உள்ள நாலந்தா பப்ளிக் பள்ளியில் விட்டு விட்டு விடுதிக்கு சென்றார் கிருஷ்ணசாமி.
அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அங்குள்ளவர்கள் கிருஷ்ணசாமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி அவரது உயிர் சிறிது நேரத்திலேயே பிரிந்தது.
இந்தநிலையில் இந்த தகவல் தெரியாமலேயே கஸ்தூரி மகாலிங்கம் 3 மணி நேரத் தேர்வை எழுதி முடித்தார். இதனிடையே விளாக்குடியில் உள்ள கிருஷ்ணசாமியின் மனைவி பாரதி மகாதேவியை செல்போனில் முதல்வர் எடப்பாடி தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
அதுபோல் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணனும் பாரதி மகாதேவியை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். அப்போது உடலை தமிழகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதல்வரிடம் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications