எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு டெங்கு பாதிப்பு பற்றி கவலையில்லை- மு.க.ஸ்டாலின் பொளேர்
எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு டெங்கு பாதிப்பு குறித்து கவலையில்லை என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு டெங்கு பாதிப்பு குறித்து கவலையில்லை. ஆட்சியை தக்க வைப்பதில்தான் எடப்பாடிக்கு கவலை அதிகம் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அண்ணா அறிவாயலத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், எடப்பாடி பழனிச்சாமி அரசு டெங்கு பாதிப்பு பற்றி கவலைப்படவில்லை. மாறாக ஆட்சியை தக்க வைப்பதில்தான் எடப்பாடி பழனிச்சாமி கவலைப்படுகிறார்.

போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை அரசு உடனே பரிசீலனை செய்ய வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடந்தால் பொதுமக்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும்.
பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வலியுறுத்தினோம். அவர் மறுத்துவிட்டார். எனவே நாங்கள் நீதிமன்றத்தை நாடினோம். ஓபிஎஸ் உள்பட 12 பேர் முதல்வருக்கு எதிராக வாக்களித்தபோது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆனால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை மட்டும் தகுதிநீக்கம் செய்து ஜனநாயகப் படுகொலை செய்துவிட்டார் சபாநாயகர் என்றார் மு.க.ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications