8 வழிச்சாலை குறித்த விவசாயிகளின் கருத்துகளை மத்திய மாநில அரசுகளிடம் சமர்பிப்போம் : அன்புமணி
8 வழிச்சாலை குறித்த விவசாயிகளின் கருத்துகளை மத்திய மாநில அரசுகளிடத்தில் சமர்பிப்போம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சேலம் : சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் குறித்து விவசாயிகளின் கருத்துகளை மத்திய மாநில அரசுகளிடத்தில் அறிக்கையாகச் சமர்பிப்போம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்துள்ளார்.
சேலம் - சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்தைத் தீவிர முனைப்போடு தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும், அவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.

இதுகுறித்து, 8 வழிச்சாலை திட்டத்திற்காக 5 மாவட்டங்களிலும் பாமக சார்பில் விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக்கூட்டம் நடத்த பாமக முடிவு செய்தது. அதன்படி நேற்று திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அன்புமணி கூட்டம் நடத்தினார்.
இதுகுறித்து சேலத்தில் அவர் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 5 மாவட்டத்தில் விவசாயிகள் தங்களுக்கு இந்த திட்டம் வேண்டாம் என்று எதிர்க்கும் நிலையில் அரசு அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் செயல்பட்டு வருகிறது.
5 மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டு அதை மத்திய, மாநில அரசுகளிடம் சமர்பிக்க இருக்கிறோம். தேவைப்பட்டால் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து மாற்றுப்பாதை குறித்தும் வலியுறுத்த உள்ளோம். இந்தத் திட்டத்தின் மூலம் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளை விட விவசாயக் கூலிகள் அதிக அளவு பாதிக்கப்படுவார்கள்.
ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்தத் திட்டங்கள் குறித்து சட்டசபையில் தவறான தகவல்களை அடுக்கி வருகிறார். சேலம் - சென்னை இரண்டே கால் மணி நேரத்தில் சென்னை வந்துவிடலாம் என்கிறார். அதற்கு வாய்ப்பே இல்லை.
அதே போல, விவசாயிகள் தாமாக முன் வந்து நிலங்களை அரசுக்கு அளிக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சேலத்தில் இருந்து சென்னைக்கு 3 வழிகள் இருக்கும் போது, இந்தத் திட்டம் எதற்கு என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
-
சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
சீட் தரேன்.. யாராவது இருக்கீங்களா? தேடி தேடி ஆள் பிடிக்கும் ராமதாஸ்.. இப்படி ஒரு மோசமான நிலையா? -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
“மாம்பழத்தை ஜூஸ் ஆக்கிவிடாதீர்கள்..” பாமக வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications