தினகரன் ஆதரவு 18 பேருக்கும் எடப்பாடி தரப்பு அழைப்பு? தீர்ப்பு வெளியாகும் நிலையில் நமது அம்மா பாச மழை
Recommended Video

சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு இன்று வெளியாக உள்ள நிலையில், அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா, ஒரு கவிதை பாணியிலான கருத்தை வெளியிட்டுள்ளது.
அரசியல் கருத்துக்களை நையாண்டியோடு எடுத்து சொல்லும், சித்ரகுப்தன் என்ற பெயரில் எழுதப்படும் பத்தியில் இந்த கவிதை இடம் பெற்றுள்ளது.

பதினெண் கீழ்க் கணக்கு... என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள அந்த கவிதையில், சேராத இடம் சேர்ந்து 18 பேர் வீழ்ந்ததாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
கரம் சிவக்கக் கொடுத்துச் சிறந்த கர்ணனும், களத்தே மாண்டான் எனில் துஷ்ட துரியோதனக் கும்பலோடு கூடாத இடம் தன்னில் கூடியதால்தான்..
சகுனியை சார்ந்தோர் அழிந்ததும்.. சாரதியாம் கண்ணனைச் சார்ந்தோர் வாழ்ந்ததும்... அவனை நம்பிய அவல் குசேலனும் அதி குபேரன் ஆநதும்.. குலம் பார்த்து கூடியதால் மட்டுமே!
திருமாலை வணங்கியதால் முடி துறந்த மன்னனும் குலசேகர ஆழ்வாராய் குடி உயர்ந்தது போல நல்லோரை கும்பிட்ட கரங்களுக்கு மட்டும்தான் அது பிரியுமுனஅனே நன்மைகள் குவிகிறது!
இவ்வாறு நீண்டு செல்கிறது அந்த கவிதை. இதன் மூலம், தினகரன் தரப்பை துரியோதனர் கூட்டத்தோடு ஒப்பிட்டு, எடப்பாடி பழனிச்சாமி தரப்பை பஞ்ச பாண்டவர்கள் தரப்புடன் ஒப்பிட்டுள்ளது இந்த கவிதை. இதன் மூலம், சேர வேண்டிய இடத்தில் சேர்ந்தால் பிரச்சினை இருக்காது என்று மறைமுகமாக 18 பேருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications