சைக்கிளில் காற்றைப் பிடுங்கிய பிரச்சினை... நெல்லை பள்ளி மாணவர்கள் கடும் மோதல் - 8 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை அருகே பள்ளி ஒன்றில் மோதலில் ஈடுபட்ட 8 மாணவர்கள் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை தாழையூத்து அருகே செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் இன்று காலை மாணவர்களுக்கிடையே மோதல் உண்டானது. 9ம் வகுப்பு மாணவர் ஒருவரது சைக்கிளில் காற்றை, மற்றொரு மாணவர் எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

இரு வகுப்பு மாணவர்கள் கடுமையாக மோதிக் கொள்வதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மோதலில் ஈடுபட்ட 8 மாணவர்களை அவர்கள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப் பட்டுள்ளனர்.
பள்ளியில் மாணவர்கள் கடுமையாக மோதிக் கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications