ஆணவத்தில் கொக்கரிக்கும் ஜெ. மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புகிறார்: இளங்கோவன்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, 'தி.மு.க. - காங்கிரஸ் ஊழல் கூட்டணி, ஓட்டு கேட்டு வரும்போது விரட்டி அடியுங்கள்" என்று ஆணவத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு கொக்கரித்திருக்கிறார்.

தமது சுற்றுப்பயணத்தில் காசு கொடுத்து வலுக்கட்டாயமாக கூட்டி வரப்பட்ட கூட்டத்தைத் தவிர ஒட்டுமொத்த தமிழ் மக்கள் அனைவரும் ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தை புறக்கணித்து வருகிறார்கள். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் வாய்க்கு வந்தபடி வசைமாறி பொழிந்து வருகிறார்.
அவரது குற்றச்சாட்டைப் பார்க்கிறபோது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதுபோல இருக்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications