ஒழுக்கத்தைப் பற்றி பேச தங்கபாலுவுக்கு யோக்கியதை இல்லை - இளங்கோவன் திகுதிகு!
சென்னை: ஒழுக்கத்தை பற்றி பேச தங்கபாலுக்கு யோக்கியதை இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "பதவி என்பது ஒன்றும் நிரந்தரமானதல்ல. கட்சி தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவேன். நேர்மை மற்றும் ஒழுக்கத்தை பற்றி பேச தங்கபாலுக்கு யோக்கியதை இல்லை, என்னை நேர்மையற்றவர் என்று கூறும் தங்கபாலு, என்னுடன் இதுகுறித்து நேருக்குநேர் விவாதிக்க தயாரா எனக் கூறவேண்டும்.

என்னைப் பொருத்தவரை நான் கட்சி தொண்டர்களையும் மூத்த தலைவர்களையும் அரவனைத்து செல்கிறேன். திமுக தற்போது ஆட்சியில் இல்லை என்பதால் அதைப் பற்றி நான் எந்த விமர்சனமும் கூறவில்லை அவ்வளவுதான். அதிமுக ஆட்சியிலிருப்பதால் அதை விமர்சிக்கிறேன்.
அவர்கள் புகார்கள் சொன்னார்களா இல்லையா என்று எனக்கு தெரியாது. அவர்கள் கட்சித் தலைவர் சோனியாவை சந்தித்தார்கள். இதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் இன்றும் தங்களை காங்கிரஸ்காரர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
என்னை பொறுத்தவரை நான் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கின்றேன். எனக்கு பதில் யாரையாவது மேலிடம் நியமிக்க முடிவு செய்தால் அதனை நான் ஏற்றுக்கொள்வேன். இதற்கு மேலிடத்திற்கு உரிமை உள்ளது.
நான் தலைவர் ஆன மறுநாளே இவர்கள் டெல்லி செல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ஒரு வருடம் கழித்து வந்திருக்கிறார்கள். நான் வேலை செய்யவில்லை என்று சொல்வதை என்னால் ஏற்றக்கொள்ள முடியாது. இந்த ஒரு வருட காலத்தில் என்ன வேலை நடந்திருக்கிறது. கட்சிப் பணிகள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடந்தது தொண்டர்களுக்கு தெரியும்.
கவிஞர் தங்கபாலு என்ற பெயரோடு அரசியலுக்கு வந்தவர். இன்றைக்கு ஒரு பொறியியல் கல்லூரி, ஆத்தூருக்கு பக்கத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நிலம், அதேபோல் தருமபுரி, கிருஷ்ணகிரியில் கிரானைட் சுரங்கங்கள், அதேபோல் கேரளாவில் மிகப்பெரிய எஸ்டேட், தங்கவேலு என்ற பெயரில் பொறியியல் கல்லூரி சென்னையில் வைத்துள்ளார். இவை எல்லாம் கவிஞர் கண்ணதாசனைப்போல் பாட்டெழுதி சம்பாதித்ததா அல்லது கதை வசனம் எழுதி சம்பாதித்ததா அல்லது உழைத்து சம்பாதித்ததா என்பதை அவர் கணக்கு வெளியிட வேண்டும் என்றார் இளங்கோவன்.
-
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications