பழைய ரூபாய் நோட்டை மாற்ற நீண்ட வரிசையில் காத்திருந்த முதியவர் பலி.. கோவையில் சோகம்
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றச் சென்ற முதியவர் நீண்ட வரிசையில் காத்திருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கோவை: கோவையில் 500 மற்றும்1000 ரூபாய் பழைய நோட்டுகளை மாற்ற அஞ்சல் நிலையத்திற்கு சென்ற 57 வயது முதியவர் நீண்ட வரிசையில் காத்திருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழிந்துள்ளார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் வசித்து வந்தவர் ராமச்சந்திரன். 57 வயதான இவர், தான் வைத்திருந்த 500 மற்றும் 1000 ரூபாய் பழைய நோட்டுகளை அஞ்சலகத்தில் செலுத்தி புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்வதற்காக காலையிலேயே வீட்டில் இருந்து கிளம்பி வெயிலுக்கு முன்னதாக கணபதி மூர்மார்க்கெட் அஞ்சலகத்திற்கு வந்தார். அங்கு வந்து பார்த்த போது அவருக்கு முன்னால் ஒரு பெரிய கூட்டம் அஞ்சலகத்தை முற்றுகையிட்டு இருந்தது.

இதனால் என்ன செய்வதென்று தெரியாத முதியவர், வீட்டிற்கும் திரும்பி செல்ல முடியாமல் பணத்தை மாற்றுவதற்காக காத்திருந்த நீண்ட வரிசையில் தானும் போய் நின்று கொண்டார். கால்கடுக்க நீண்ட நேரம் ஆகியும் அஞ்சலகத்தில் பழைய ரூபாய் நோட்டை மாற்ற முடியவில்லை.
இந்நிலையில், ராமச்சந்திரன் திடீரென நின்ற இடத்திலேயே நெஞ்சில் கை வைத்துக் கொண்டு மயங்கி விழுந்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கி பார்க்கும் போது அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. நீண்ட நேரம் வரிசையில் நின்றதால் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்துள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10ம் தேதியில் இருந்து பழைய நோட்டுகளை மாற்ற வங்கி மற்றும் அஞ்சலகங்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இளையவர்களே வரிசையில் நிற்க முடியாமல் திணறி வரும் நிலையில், முதியவர்கள் நிலை மிக மோசமாகவே உள்ளது. முதியவர்களுக்கு முன்னுரிமை அளித்து பழைய நோட்டுகளை மாற்றித் தரப்படும் என்றும் அவர்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் வங்கிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், உண்மை நிலை வேறாகவே இருந்து வருகிறது.
ஒவ்வொரு வங்கியிலும், பழைய நோட்டுகளை மாற்ற வரும் முதியவர்களுக்கென்று தனி வரிசைகளை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், அவர்கள் உட்காருவதற்கான நாற்காலி வசதிகளை வங்கிகள் ஏற்படுத்தி தர வேண்டும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications