Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்கள் திடீர் ரத்து: பயணிகள் தவிப்பு !

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இரவு 10 மணியில் இருந்து மின்சார ரயில்கள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் தவித்து வருகின்றனர். இதையடுத்து ரயில்களை இயக்கக் கோரி பயணிகள் போரட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Electrical train cancelled

ஆனால் போலீசாரின் சமரசப் பேச்சை ஏற்காத பயணிகள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ரயில் பயணிகள் கூறுகையில், ரயில்வே நிர்வாகம் முன்னறிவிப்பின்றி மின்சார ரயில்களை ரத்து செய்ததாக குற்றம்சாட்டினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+