குழியில் விழுந்த குட்டி யானை... பாசத்தால் தவித்து கடுமையாக போராடி மீட்ட யானைகள்!
களக்காடு: நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் குழிக்குள் விழுந்த குட்டி யானையை மற்ற யானைகள் பாசபோராட்டம் நடத்தி மீட்ட காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது.
நெல்லை மாவட்டம் களக்காடு மலை அடிவாரப்பகுதியில் கடந்த இரு மாதங்களாக காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. பகல் நேரங்களில் மலை அடிவாரங்களில் யானைகள் தங்குகின்றன. இரவு தொடங்கியதும் விளை நிலங்களில் புகும் காட்டு யானைகள் தென்னை, முந்திரி, வாழை மரங்கள் மற்றும் விவசாய பயிர்களை அழித்து நாசம் செய்து வருகின்றன.
இதனால் விவசாயிகள் சொல்ல முடியாத வேதனையில் தவித்து வருகின்றனர். இதையடுத்து வனத்துறையினர் யானைகள் புகாமல் இருக்க ஊருக்குள் அகழி தோண்டியுள்ளனர். இந்நிலையில் அதிகாலையில் களககாடு-சேரன்மகாதேவி சாலையில் உள்ள பூதத்தான்குடியிருப்பு கிராமத்திற்கு மேற்கே மலை அடிவாரத்தில் காட்டு யானைகளின் பிளிறல் கேட்கவே பொதுமக்கள் பீதியடைந்தனர்.
அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது வனத்துறையினர் தோண்டிய குழியில் குட்டி யானை ஓன்று விழுந்து கிடந்தது. அது வெளியே வர முடியாமல் அங்கும் இங்கும் குழிக்குள் தவித்து கொண்டிருந்தது. சுற்றிலும் பல யானைகள் சூழ்ந்து நின்றிருந்தன. இதுகுறித்து உடனடியாக பொதுமக்கள் களக்காடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
குட்டியை மீட்க பொதுமக்கள் முயன்ற போது அருகில் மற்ற யானைகள் அவர்களை துரத்தின. யானைகள் தொடர்ந்து பிளறியதால் மேலும் பல யானைகள் காட்டுக்குள் வர தொடங்கின. அவை குழிக்குள் விழுந்த குட்டியை நீண்ட நேரம் கடுமையாக போராடி ஒரு வழியாக மீட்டு சென்றன.
வனத்துறையினர் வருவதற்கு முன்பே குட்டியை யானைகள் மீட்டு சென்றதால் அவர்கள் திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் பொதுமக்கள் இரவில் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே தவித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications