யானை மிதித்து மீண்டும் ஒருவர் பலி.. கிருஷ்ணகிரியில் கொடூரம்
கிருஷ்ணகிரி அருகே யானை மிதித்து முனிராஜ் என்பவர் மரணம் அடைந்துள்ளார்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே யானை மிதித்து முனிராஜ் என்பவர் மரணம் அடைந்துள்ளார். யானை மிதிப்பதால் ஒரே வாரத்தில் நடக்கும் இரண்டாவது மரணம் ஆகும் இது.
சூளகிரி அடுத்த சின்னாறு பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவர் இன்று அந்த பகுதிக்கு வந்த தனி யானை ஒன்று மிதித்து மரணம் அடைந்து இருக்கிறார்.

அருகில் இருந்த காட்டுப்பகுதியில் இருந்து அந்த யானை வந்துள்ளது. அந்த பகுதியில் யானைகளின் அத்துமீறல் அடிக்கடி ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து இருக்கின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் தற்போது முனிராஜ் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இது அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதேபோல் ராஜப்பா என்பவர் நேற்று யானை மிதித்து உயிரிழந்தார். இவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னாறு பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications