ஓ இதுதான் பூத்தா... வால்பாறை வாக்குச்சாவடிக்கு வந்த யானை... மிரண்டு ஓடிய வாக்காளர்கள்!
வால்பாறை: வால்பாறை அருகே வாக்குச்சாவடி ஒன்றில் திடீரென யானை ஒன்று புகுந்ததால், அங்கிருந்த வாக்காளர்கள் மிரண்டு ஓடி ஒளிந்து கொண்டார்கள். பின்னர் வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டி அடித்ததைத் தொடர்ந்து வாக்குப்பதிவு தொடர்ந்தது.
தமிழக சட்டசபைத் தேர்தல் நேற்று நடைபெற்றது. அதன்படி, கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று காலை சாரல் மழை மற்றும் பனிமூட்டமுமாகக் காணப்பட்டதால் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்றது.

ஷேக்கல்முடி, முருகாளி, கல்யாணப்பந்தல், சோலையார் அணை, உருளிக்கல் வாக்குச்சாவடிகள் பனிமூட்டத்தால் சூழப்பட்டிருந்தன. இருந்தபோதிலும் தோட்டத்தொழிலாளர்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். தொலைத்தொடர்பு கிடைக்காத முருகாளி வாக்குச் சாவடியில், வாக்கி-டாக்கி பயன்படுத்தப்பட்டது.
இதேபோல், கேரள எல்லையில் உள்ள சோலையார் அணை வாக்குச் சாவடிக்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு அளித்தனர். யானைகள் நடமாட்டமுள்ள குரங்குமுடி, பன்னிமேடு வாக்குச் சாவடிகளில் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர்.
ஆனபோதும், குரங்குமுடி எஸ்டேட்டில் உள்ள அரசு துவக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் நேற்று காலை யானை ஒன்று புகுந்தது. வாக்களிப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த மக்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பயத்தில் அருகில் இருந்த அறைகளுக்குள் ஓடிச் சென்று அவர்கள் பதுங்கினர்.
உஷாரான போலீசார் மற்றும் வனத்துறையினர் சப்தம் எழுப்பி அந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
அதன்பிறகே நிம்மதி அடைந்த வாக்காளர்கள் மீண்டும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications