நீர் இல்லாத காடுகள்... குடியிருப்புப் பகுதியை முற்றைகையிடும் யானைக் கூட்டம் - வீடியோ
குன்னூர் வனத்துக்குள் விலங்குகள் குடிக்க போதுமான நீர் இல்லாத காரணத்தால், யானைகள் குடியிருப்புப் பகுதிகள் நுழைந்தன. அவற்றை வனத்துக்குள் அனுப்ப வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
குன்னூர்: குன்னூர் குடியிருப்புப் பகுதிகளில் நுழைய முயன்ற யானைக் கூட்டத்தை விரட்ட வனத்துறை அதிகாரிகள் கடுமையாகபோராடி வருகின்றனர். இருந்தாலும் யானைக் கூட்டம் வனத்துக்குள் செல்லாமல் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.
குன்னூர் வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டமாக வெளியேறி குன்னூர் காந்தி நகர், ரன்னிமேடு உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிக்குள் நுழைய முயற்சி செய்து வருகின்றன.

யானைகள் குடியிருப்புக்குள் நுழையும் தகவலை வனத்துறையினருக்கு பொதுமக்கள் தெரிவித்தனர். அதனையடுத்து விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் யானைகளை விரட்ட பட்டாசு கொளுத்திப்போட்டனர்.மேலும் தீப்பந்தங்களை ஏந்தியும் விரட்டினர்.
ஆனால், யானைகள் வனத்துக்குள் செல்லாமல் அடம்பிடித்து அதேபகுதியில் உள்ள தேயிலை காட்டுக்குள் நுழைந்துவிட்டன. அவற்றை வனத்துக்குள் எப்படியாவது அனுப்ப வனத்துறையினர் பாடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுவதின் காரணமாக வனப்பகுதியில் உள்ள சிற்றாறுகள்,ஓடைகளில் நீர் இல்லை. காட்டு விலங்குகளின் நீர் ஆதாரமாக விளங்கிய அவை வற்றிவிட்டதால், நீருக்காக யானைகள் உள்ளிட்ட விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைகின்றன.
வனத்துறையினர், கடும் கோடையில் விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்ற ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிட்டு செய்திருந்தால் விலங்குகள் காட்டை விட்டு நீருக்குகாக குடியிருப்புப்பகுதிகளில் நுழைந்திருக்காது என பொதுமக்கள் கூறுகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications