ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாளிகை, வணிக நிறுவனங்கள், கல்விக் கடைகளை அகற்ற என்ன திட்டமாம்?: ராமதாஸ்
சென்னை: நீர்நிலைகளில் இருந்த குடிசைகளை மிகவும் எளிதாக அகற்றிவிட்ட தமிழக அரசு, நிகழ்கால மற்றும் கடந்த கால ஆளுங்கட்சி ஆதரவுடன் ஏரிகளையும், குளங்களையும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாட மாளிகைகளையும், வணிக நிறுவனங்களையும், கல்விக் கடைகளையும் அகற்ற என்ன திட்டம் வைத்திருக்கிறது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னையில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அடையாற்றின் கரையோரம் குடிசைகளில் வாழ்ந்த மக்களுக்கு மாற்று இடம் ஒதுக்கித் தரும் திட்டத்தின்படி குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட 10,000 வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வீடுகளைப் பெறுபவர்களில் சிலருக்கு அதற்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டிருக்கிறது.

மாற்று இடங்களுக்கான ஆணைகள் வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சைதாப்பேட்டை ஆற்றுமா நகரில் இருந்த நூற்றுக்கணக்கான குடிசைகள் இடித்து தள்ளப்பட்டிருக்கின்றன. மற்றப் பகுதிகளிலும் இந்த நடவடிக்கை தொடரவிருக்கிறது. அடையாற்றின் கரைகளில் வசித்த மக்களுக்கு அவர்களின் குடிசைகளை அகற்றி விட்டு, அடுக்குமாடி வீடுகளை ஒதுக்குவதை குறை கூற முடியாது. ஆனால், அவை எங்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்பது தான் சிக்கலே. ஒக்கியம் துரைப்பாக்கம், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக யாரும் குடியேறாமலிருந்த வீடுகள் தான் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் அண்மையில் ஏற்பட்ட மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தான் உள்ளன. அந்த வீடுகள் எதிர்காலத்தில் மழை வெள்ளம் ஏற்பட்டால் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பது மில்லியன் டாலர் வினா. அதுமட்டுமின்றி, இந்த குடிசைகளில் வாழ்ந்த மக்கள் அனைவரும் அன்றாடம் கூலி வேலை செய்தோ, தெருவோர வணிகம் செய்தோ பிழைப்பவர்கள். இதை சென்னையில் இருந்து தான் செய்ய முடியும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.
ஆனால், அவர்களை இப்போது அவர்கள் குடியிருந்த பகுதிகளில் இருந்து பல கி.மீ. தொலைவில் அரசு குடியமர்த்தியிருக்கிறது. இப்போது குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் அவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க வாய்ப்பில்லை. அதேபோல், அவர்கள் நாள்தோறும் சென்னைக்கு வந்து பிழைப்பு தேடுவதும் சாத்தியமற்றது. அடையாறு, கூவம் உள்ளிட்ட ஆறுகளின் கரைகளில் வாழ்ந்த ஏழை மக்கள் கடந்த காலங்களில் பலமுறை இவ்வாறு குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு பிழைப்பு கிடைக்காததால், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை விட்டு ஏற்கனவே தாங்கள் வசித்த பகுதிக்கே திரும்பி குடிசை போட்டு வாழத் தொடங்கியிருக்கின்றனர். இத்தகைய சூழலில் குடிசைவாசிகளுக்கு தொலைதூரத்தில் மாற்று இடங்களை ஒதுக்கும் தமிழக அரசின் திட்டம் சரியானதாக தோன்றவில்லை.
நீர்நிலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆற்றங்கரையோரம் பாதுகாப்பு இல்லாமல் வாழும் மக்களுக்கு மாற்று இடம் வழங்குவது தான் பாதுகாப்பானதும் கூட. ஆனால், அவர்களுக்கு ஒதுக்கப்படும் மாற்று இடம் பாதுகாப்பானதாகவும், எளிதில் வாழ்வாதாரம் தேடக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும். எனவே, அடையாற்றின் கரைகளில் இருந்து அப்புறப்படுத்தப்படும் மக்களுக்கு அவர்கள் ஏற்கனவே வசித்த பகுதியிலிருந்து 3 கி.மீ. தொலைவுக்குள் மாற்று இடம் வழங்கப்பட வேண்டும்.
அதேபோல், நீர்நிலைகளில் இருந்த குடிசைகளை மிகவும் எளிதாக அகற்றிவிட்ட தமிழக அரசு, நிகழ்கால மற்றும் கடந்த கால ஆளுங்கட்சி ஆதரவுடன் ஏரிகளையும், குளங்களையும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாட மாளிகைகளையும், வணிக நிறுவனங்களையும், கல்விக் கடைகளையும் அகற்ற என்ன திட்டம் வைத்திருக்கிறது? என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். ‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி' என்பதைப் போல ஏழைகளின் குடிசைகளை அகற்றிவிட்டு பணம் படைத்தவர்களின் ஆக்கிரமிப்புகளை பாதுகாக்க அரசு முயன்றால் மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications