Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சரக்கு" தான் முக்கியம் - மது குடிக்க கோவில் உண்டியலைத் திருடி சிக்கிய மாணவர்!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோட்டில் குடிக்க பணமில்லாத காரணத்தினால் கோவில் உண்டியலில் கொள்ளையடித்த மாணவர் ஒருவரும், மெக்கானிக் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், திங்களூர் சந்தைபேட்டை அருகே உள்ள பிள்ளையார் கோவிலில் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி இரவு உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. புகாரின்படி, திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Erode college student arrested for theft

இதேபோல் வரப்பாளையம் அருகிலுள்ள பட்டிமணியக்காரன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் திருட முயன்றனர்.

அப்போது காவலிருந்த வாட்ச்மேன் கூச்சலிட்டதால் கொள்ளை கும்பல் தங்கள் வந்திருந்த அங்கேயே பைக்கை நிறுத்தி விட்டு ஓடியது. இதுகுறித்து, வரப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேற்கண்ட இரு சம்பவங்களிலும் தொடர்புடைய கோசணத்தை சேர்ந்த நந்தகுமார் மற்றும் துரைசாமி ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.இருவரும் உறவினர்கள். ஊட்டி அருகே உள்ள தனியார் கலை கல்லூரியில் துரைசாமி படித்து வருகிறார். நந்தகுமார் மெக்கானிக்காக வேலை செய்கிறார். மது குடிக்க பணம் இல்லாததால் இருவரும் திருட்டில் ஈடுபட்டதாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+