ஈரோட்டில் இன்று முதல் 2 நாட்கள் திமுக மண்டல மாநாடு! கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

திமுக மண்டல மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஈரோடு: ஈரோட்டில் திமுக மண்டல மாநாட்டை கட்சிக் கொடியேற்றி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மாநில சுயாட்சி, சமூக நீதி, மதநல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு இன்று தொடங்கி 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது. பெருந்துறை அண்ணா நகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தந்தை பெரியார் பெயரில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டுக்கு வருகை தந்த ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 2 நாட்களில் 50 தலைப்புகளில் திமுக சொற்பொழிவாளர்களின் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

கோவி. செழியன் எம்.எல்.ஏ. கொடியேற்றி வைத்தார். மாநாட்டு வரவேற்புகுழு தலைவர் முத்துசாமி வரவேற்புரையாற்றுவார். காலை 11 மணிக்கு மாநாட்டு தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உரையாற்றுகிறார். மாநாட்டை திருச்சி சிவா எம்.பி. திறந்துவைத்தார்.












Click it and Unblock the Notifications