ஈரோடு அதிமுக பெண் மேயரின் அப்பா.. திமுகவுக்குத் தாவினார்!
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி அதிமுக பெண் மேயர் மல்லிகா பரமசிவத்தின் தந்தை ஜெகன்னாதன் திமுகவுக்குத் தாவியுள்ளார். இதனால் ஈரோடு பகுதி அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மேயராக இருப்பவர் மல்லிகா பரமசிவம். இவரது தந்தை பெயர் ஜெகன்னாதன். இவர் தீவிர அதிமுக தொண்டராக இருந்தவர். எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே அதிமுகவில் இருந்து வந்தவர். 50வது வட்ட அதிமுக அவைத் தலைவராகவும் இருந்து வந்தார். கட்சியில் பல பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென அவர் நேற்று மாலை திமுக பொதுச் செயலாளர் அன்பழகனைச் சந்தித்து திமுகவில் சேர்ந்து விட்டார். திமுகவில் சேர்ந்த கையோடு ஜெலலிதா சர்வாதிகாரி என்றும், இனியும் அவரது போக்குக்கு அதிமுகவினர் இரையாகக் கூடாது என்றும் கூறியுள்ளார் ஜெகன்னாதன்.












Click it and Unblock the Notifications