”உங்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது” ஓட்டு போட்ட மக்களுக்கு நாமம் போட்ட அதிமுக எம்எல்ஏ
ஈரோடு: தனது தொகுதி மக்களை நோக்கி "உங்களுக்கு எதுவும் செய்து தர முடியாது" என்று ஒலிபெருக்கியில் கோபமாக அதிமுக எம்எல்ஏ தெரிவித்தது ஈரோட்டில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக செல்வகுமார சின்னையன் போட்டியிடுகிறார். இன்று பிரசாரத்தில் ஈடுபட்டபோது இவருடன் காங்கேயம் தொகுதி எம்எல்ஏ என்.எஸ்.என் நடராஜன் மற்றும் கட்சி பிரமுகர்கள் உடன் சென்றனர்.
பிரசார வேன் வெள்ளகோவில் 20 ஆவது வார்டு தீரன் சின்னமலை நகர் அருகே சென்றபோது காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர். தங்கள் பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை என்றும், நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலரிடம் முறையிட்டும் பலனில்லை. எனவே நீங்கள் இந்த பிரச்னையை தீர்ப்பதாக உறுதி கூற வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த எம்எல்ஏ நடராஜன் "உங்களுக்கு எதுவும் செய்து தர முடியாது" என ஒலிபெருக்கியில் கோபமாக தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார். தேர்தல் பிரசாரத்தின் போது எம்எல்ஏ இவ்வாறு கூறி சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications