நொய்யல் ஆற்றில் மீண்டும் நுரை நுரையாக பொங்கும் நீர்: சாய ஆலையின் கழிவா? பொதுமக்கள் பீதி
ஒரத்துப்பாளையம் அணையிலிருந்து நுரையுடன் நீர் வெளியேறியதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
Recommended Video

ஈரோடு: சென்னிமலை அருகேயுள்ள ஒரத்துபாளையம் அணையிலிருந்து நுரையுடன் கூடிய தண்ணீர் வெளியேறுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாநகர் மற்றும் புற நகர் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்தது. அதே போல கோவை மாவட்டத்திலும் மழை பெய்ததால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வர துவங்கியது. இந்த தண்ணீரானது ஒரத்துபாளையம் அணையிலிருந்து வெளியேறும்போது 5 அடிக்கு மேல் நுரை வருகிறது. திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலை கழிவுநீரை மழைநீருடன் திறந்து விட்டதால் நுரையுடன் வருகிறது என்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த முறை 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெய்த மழையில் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதும் இதே போல் நுரை பொங்கியது. அப்போதும் வெள்ள நீரை பயன்படுத்தி சாய ஆலைகள் சாய கழிவுகளை திறந்துவிட்டதாலேயே நுரை ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன், இது கோவை மக்கள் பயன்படுத்திய சோப்பு நுரைகள் என கூறி சமூகவலைதளங்களின் மீம்ஸ்க்கு ஆளானார்.
தற்போதும் மழையினையும் பயன்படுத்தி முறைகேடாக இயங்கும் சில சாய சலவை ஆலைகள், சாய கழிவு நீரை கலக்கிறதோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இது போண்ற நுரை செல்லும் நீரால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் , மாசுக்கட்டுபாடு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சாயகழிவு பிரச்சனையால் ஒரத்துபாளையம் அணையில் கடந்த பல ஆண்டுகளாக தண்ணீர் மதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications