ஈரோடு மாநகராட்சியின் 3-வது வார்டில் அடிப்படை வசதிகளை செய்யாவிட்டால் போராட்டம்.. மக்கள் எச்சரிக்கை
அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு ஈரோடு மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video

ஈரோடு: அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தராவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக மாநகராட்சிக்கு ஈரோடு மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாநகராட்சி மூன்றாவது வார்டு சி.எம்.நகர்,மாதேஸ்வரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆர்.என்.புதூரில் இருந்து சித்தோடு செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த பகுதிகளில் கழிவுநீர் செல்வதற்கான வசதிகள் இல்லை. இதனால் தெருக்களில் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களும் பரவிவருகிறது.

மேலும் சம்பந்தப்பட்ட சாலையும் தற்போது குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாலை சேதமடைந்துள்ளதால் இந்த பகுதியில் இயக்கப்பட்டு வந்த சிற்றூந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லவேண்டிய நிலை உள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையினால் சாலை சேறும் சகதியுமாகி இருசக்கர வாகன ஓட்டிகள் சிறு சிறு விபத்துகளை சந்தித்து வருகின்றனர் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் வேதனை. அடிப்படை வசதிகளுக்காக எங்கும் தங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டத்தில் ஈடுபடபோவதாக அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications