ஈரோடு: கடன்பாக்கி தராத சாய ஆலை உரிமையாளரை 4 நாட்கள் அறையில் பூட்டிய கொடூரம்
கடன்பாக்கி கொடுக்காத சாய ஆலை உரிமையாளரை 4 நாட்கள் அறையில் வைத்து பூட்டி வைத்துள்ளனர்.
ஈரோடு: கடன் பிரச்சனையில் சாய தொழிற்சாலை உரிமையாளரை அறையில் அடைத்து வைத்ததாக எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சித்தோடு பள்ளக்காட்டை சேர்ந்தவர் பெருமாள். சாயதொழிற்சாலை உரிமையாளரான இவர் பவானியை சேர்ந்த கந்தன் கலர்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நூலுக்கு சாயமிடும் பணியை செய்துள்ளார்.

அந்த வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் கொடுக்க வேண்டியதிருந்தது. ஆனால் 6 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று மிரட்டிய கந்தன் கலர்ஸ் உரிமையாளர் பரத்குமார் பெருமாளை கடத்தி சென்று தொழிற்சாலை அறையில் நான்கு நாட்களாக பூட்டி வைத்துள்ளார்.
மேலும் பெருமாள் தனது நண்பர்களிடம் பணம் பெற்று 4 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயினை கொடுத்துள்ளார். மேலும் அவரது இருசக்கர வாகனம், அலுவலக பொருட்கள் காசோலை, எல்.ஐ.சி பாண்ட் ஆகியவற்றை பறித்து கொண்ட பின்னரும் விடுவிக்காததால் அங்கிருந்து தப்பி வந்து ஈரோடு எஸ்பியிடம் நேற்று புகார் அளித்தார். தன்னை அடைத்து வைத்த பரத்குமார் மீது நடவடிக்கை எடுத்து தனது பொருட்களை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications