ஈரோட்டில் மே தின பேரணி: ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்பு
அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பேரணி நடைபெற்றது.
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடில் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் பேரணி நேற்று நடைபெற்றது. இந்த பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு தொடங்கிவைத்த பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். ஈரோடு வ.உ.சி பூங்காவில் தொடங்கிய பேரணியானது பேருந்துநிலையம், மேட்டூர்சாலை, பிரப்சாலை வழியாக பன்னீர்செல்வம் பூங்காவில் நிறைவடைந்தது.

முன்னதாக மறைந்த உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் 13 குடும்பத்தினருக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணி மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் தெய்வநாயகம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications