For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பள்ளி மாணவியைச் சிதைத்த எஸ்டேட் ஊழியர் - கொல்லிமலையில் கைது

Google Oneindia Tamil News

நாமக்கல்: கொல்லிமலையில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக எஸ்டேட் தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தின்னனூர்நாடு சேத்துபலாப்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் இளவரசன். அங்குள்ள எஸ்டேட் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது உறவுக்கார சிறுமி சேளூர்நாடு கண்ணங்குலம் பட்டியை சேர்ந்தவர். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கமாக பள்ளி வகுப்பு மற்றும் சிறப்பு வகுப்புகளை முடித்து விட்டு, இரவு 8 மணிக்கு வீடு திரும்பு வது வழக்கம்.

Estate worker raped a school girl

நேற்று முன்தினம் வகுப்புகளை முடித்து விட்டு, பள்ளி முன்பு பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இளவரசன், தான் கண்ணங்குலம்பட்டிக்கு செல்வதாகவும், அந்த சிறுமியை வீட்டில் விட்டு விடுவதாகவும் கூறி உள்ளார்.

அதற்கு சம்மதம் தெரிவித்த அந்த சிறுமி அவருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி அமர்ந்து சென்று உள்ளார். அப்போது அங்குள்ள அரக் கல்பட்டி காட்டு பகுதியில் வைத்து, அந்த சிறுமியை இளவரசன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை, வாழவந்திநாடு போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளவரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
school girl was raped by an estate coolie in Kollimalai, Namakkal. police arrested him and inquiry about the case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X