அமைச்சர் நாராயணசாமி காரில் வெடிகுண்டு: டெலிபோன் பேச்சு ஆதாரம் சிக்கியது
புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் காரில் பைப் குண்டு கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பான டெலிபோன் ஆதாரங்களை தேசிய புலனாய்வு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வீடு புதுவை எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ளது. கடந்த மாதம் 29-ந் தேதி அவரது வீட்டில் கார் அருகே பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது வெடிப்பதற்கு முன்பாக போலீசார் கைப்பற்றி அகற்றினார்கள்.

அந்த வெடிகுண்டை சென்னையில் இருந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்க செய்தனர். அது மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு என்று நிபுணர்கள் தெரிவித்தனர். பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்துத்து கடந்த 1ம் தேதி புதுவையில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் அமைச்சர் நாராயணசாமியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் படை கமாண்டட் அதிகாரி ஒருவர் ஞாயிறன்று புதுவை வந்தார். அவர் நாராயணசாமிக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார். பின்னர் நாராயணசாமியை சந்தித்து இது சம்பந்தமாக நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே பைப் வெடிகுண்டு வழக்கை விசாரிக்க தேசிய புலனாய்வு படையை புதுவை அரசு கேட்டுக்கொண்டது. அதை ஏற்று தேசிய புலனாய்வு படையினர் விசாரித்து வந்தனர். ஒரு வாரமாக புதுவையிலேயே முகாமிட்டு அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்கள்.
குண்டு வைக்கப்பட்ட தினத்துக்கு முந்தைய சில நாட்களில் இருந்து அன்றைய தினம் வரை புதுவையில் இருந்து வெளியூருக்கு பேசப்பட்ட டெலிபோன்கள் பற்றி ஆய்வு செய்தனர்.
பி.எஸ்.என்.எல். மற்றும் அனைத்து தனியார் டெலிபோன் நிறுவனங்களிலும் இந்த ஆய்வு நடந்தது. அதில் சந்தேகப்படும்படி இருந்த சில டெலிபோன் எண்களை ஆய்வு செய்தனர். அதில் நாராயணசாமி வீட்டில் குண்டு வைத்தவர்கள் டெலிபோனில் உரையாடிய ஆதாரம் கிடைத்துள்ளது. அதை வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெடிகுண்டுக்குள் இருந்த ஜெலட்டின் குச்சிகள் எந்த வகையை சேர்ந்தவை, அவை எந்த பகுதியில் தயாரிக்கப்படுபவை போன்ற விவரங்களை சேகரித்தார்கள். அதிலும் முக்கிய துப்பு கிடைத்துள்ளது. இவற்றை வைத்து குண்டு வைத்தவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். விரைவில் முக்கிய குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என தேசிய புலனாய்வுப் படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications