அ.தி.மு.க. அரசின் ஊழலை எதிர்த்து 'வாங்க போராடலாம்..': அனைத்து கட்சிகளுக்கு ஈ.வி.கே.எஸ். அழைப்பு!!
சென்னை: அ.தி.மு.க. அரசின் ஊழலை எதிர்த்து போராட அனைத்து கட்சிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அழைப்பு விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு இன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அளித்த பேட்டி:

அ.தி.மு.க. அரசு நல்லாட்சியை தருவதாக கூறி ஆட்சிக்கு வந்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக லஞ்ச லாவண்ய ஆட்சியைத் தான் கொடுத்து வருகிறது. லஞ்சம் இல்லாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது.
ஆட்சி கலைப்புகள் முன்னுதாரணம்
ஒரே ஒரு குற்றச்சாட்டுக்காக ஒரு அமைச்சர் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். ஆளுநரிடம் எதிர்க்கட்சிகள், ஊழல் புகார் பட்டியல் கொடுப்பது புதிதல்ல. பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் கொடுத்த ஊழல் புகார் பட்டியல் மீது ஆளுநர்கள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். ஆட்சிகள் கலைக்கப்பட்ட வரலாறும் உண்டு.
நாங்கள் கொடுத்த ஊழல் புகார் மீது ஆளுநர் தக்க நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். அதற்காக கால அவகாசத்தை கொடுப்போம். ஒருவேளை நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசிப்போம்.
தமிழகத்தில் பல அமைச்சர்கள் சிறைக்கு போவார்கள். அப்போது நாங்கள் கூறிய புகார்களுக்கான அடிப்படை ஆதாரங்கள் என்ன என்பது தெரிய வரும்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
கட்சிகளுக்கு அழைப்பு
காங்கிரசைப் போன்று தி.மு.கவும் ஊழல் பட்டியல் கொடுக்க இருப்பதாக மு.க ஸ்டாலின் கூறி இருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு இதனை நல்ல விஷயம் என்று குறிப்பிட்ட ஈ.வி.கே.எஸ். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க. அரசின் ஊழலை எதிர்த்து போராட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை











Click it and Unblock the Notifications